பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர், பொங்கலின் சிறப்பு, புகையில்லா பொங்கல் கொண்டாடப்பட வேண்டும், சமூகம் இடைவெளி பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் அரசு வழிகாட்டு நெறிமுறைக ைள பின்பற்றி விழாவை கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி பேசினார். உதவி தாளாளர் மற்றும் இயக்குனர் மாரிமுத்து பங்கேற்று பேசினர்.பெற்றோர், மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் பிரகாஷ் நன்றி கூறினார்.பள்ளியில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்பு மாணவ, மாணவியருக்கு மஞ்சள் தினமாக கொண்டாடப்பட்டது. அதில், மாணவர்களுக்கு ஒப்புவித்தல், மாறுவேடப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE