உடுமலை:ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வாயிலாக, அனைத்து அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்க வதற்காக, 'பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு' என்ற தலைப்பில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு துாய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளுக்கும், தலா, 500 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வரும், 19ம் தேதி முதல், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பாதுகாப்பு பணி மேற்கொள்ள ஒதுக்கப்பட்டுள்ள, நிதியை உடனடியாக பயன்படுத்தி பணியினை மேற்கொள்ளவும், மாணவர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE