பொள்ளாச்சி:பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், பொங்கல் விழாவையொட்டி, 'ஒரு கைப்பிடி அரிசி, ஒரு நாள் உணவு திட்டம்' என்ற செயல்முறை நடந்தது. முதுநிலை வேதியியல், முதுநிலை தாவரவியல் துறை சார்பில் இரண்டு நாட்கள் இந்த நிகழ்வு நடந்தது.கல்லுாரி முதல்வர், மேலாளர், தேர்வு துறை பொறுப்பாளர், இந்த நிகழ்வை துவக்கி வைத்தனர். ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்கு வழங்குவதற்காக, கல்லுாரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவர்களிடம் இருந்து அரிசி பெறப்பட்டது. சேகரிக்கப்பட்ட அரிசி, ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்துக்கு வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE