உடுமலை:கால்நடை வளம் பெருக, உருவாரங்களை வைத்து, பாலாபிேஷகம் நடத்தி, மக்கள், கூடி வழிபடும், ஆல்கொண்டமால் கோவில் திருவிழா, நாளை நடக்கிறது.உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த ஆல்கொண்டமால் கோவில் அமைந்துள்ளது. கால்நடை வளம் பெருகவும், அவற்றின் பிரச்னைகளுக்கு, தீர்வு கிடைக்கவும், இக்கோவிலில், பாலாபிேஷகம் செய்து, உருவாரங்கள் வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.கோவில் தல வரலாறு திருமால் எழுந்தருளியுள்ள இக்கோவிலில், சுயம்புவாக உருவான லிங்க வடிவ புற்றுக்கு, மாடுகள் தானாக பால் சொரிந்தது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் உள்ளதாக சுற்றுப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.பல ஆண்டுகளுக்கு முன்வரை, முட்புதர்கள் சூழ்ந்து காணப்பட்டது. இப்பகுதியில், கொடிய விஷமுள்ள பாம்புகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மக்கள் வழிபாடு நடத்த முடியாத சூழல் காணப்பட்டது. இங்குள்ள, ஆலமரத்தின் கீழ், லிங்க வடிவிலான பாம்பு புற்று ஒன்று உருவாகியுள்ளது.கோவிலின் அருகிலுள்ள காடுகளில் மேய்ந்து வந்த பசுக்கள், புற்றுக்கு தானாக பாலை சொரிந்து அபிேஷகம் செய்துள்ளன. லிங்க வடிவ புற்றுக்கு, பசுக்கள் பால் சொரிவதைக்கண்ட பொதுமக்கள், இது ஆயர்பாடி கண்ணின் மகிமைதான் என்று கருதினர்.ஆலம் (விஷம்) உண்ட சிவபெருமானை குறிக்கும் லிங்க வடிவ புற்றில், கண்ணன் குடிகொண்டதால், அங்குள்ள திருமாலை, 'ஆல்கொண்டமால்' என்று மக்கள் வழிபட துவங்கினர். சிவனும், திருமாலும் ஒருங்கே அமையப்பெற்ற ஆல்கொண்டமாலுக்கு விவாசாயிகள் பால், வெண்ணை உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்து வழிபடுகின்றனர். இங்கு, வழிபட்டுச்செல்வதால் கால்நடைகள் நோய், நொடியின்றி ஆரோக்கியத்துடன் இருப்பதாக விவசாயிகள் நம்புகின்றனர்.ஏற்பாடுகள் தயார்பொங்கலையொட்டி கோவிலில் நடக்கும், தைத்திருவிழாவுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று, காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷகத்துடன், சிறப்பு பூஜைகள் துவங்குகிறது. முக்கிய நிகழ்வான திருவிழா நாளை நடக்கிறது.பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். உடுமலை போக்குவரத்து கிளையிலிருந்து சிறப்பு பஸ்கள் கோவில் வரை இயக்கப்படுகின்றன. வரிசையாக செல்வதற்கான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE