அன்னுார்:விற்பனை கூடத்தில் விளைபொருட்களை இருப்பு வைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.அன்னுார் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சிவரஞ்சனி அறிக்கை:அன்னுார் - சத்தி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நிலக்கடலை, பருத்தி, மஞ்சள், உட்பட விவசாய விளை பொருட்களை இருப்பு வைக்க, குடோன் வசதி உள்ளது. மேலும், இருப்பு வைக்கும் விளைபொருட்களின் மதிப்பில், 50 சதவீதம் வரை மிகக்குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.விவசாயிகள், வியாபாரிகள், என இரு தரப்பினரும் இருப்பு வைக்கலாம். விவசாயிகளுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரையும், வியாபாரிகளுக்கு, மூன்று லட்சம் ரூபாய் வரையிலும், கடன் வழங்கப்படுகிறது. செவ்வாய்தோறும் பருத்தி ஏல விற்பனை நடக்கிறது. ஏல விற்பனையில், விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்கலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE