சோமனூர்:நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி, தமிழ்நாடு நெசவு தறிக்காரர்கள் வாழ்வுரிமை சங்கத்தினர் முதல்வரிடம் மனு அளித்தனர்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஆதார் அட்டைகளுக்கு நிகரான அடையாள அட்டைகளை நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும். நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், இலவச மின்சாரம் வழங்க வேண்டும். நெசவாளர் குடும்பத்துக்கு, பேறுகால நிதியாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். சொந்த வீடு இல்லாமல் தவிக்கும் நெசவாளர்களுக்கு, இலவசமாக வீடு கட்டி தர வேண்டும். பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் எங்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE