திருப்பூர் : ஜெயலலிதா பாணியை பின்பற்றி கமல் பிரசாரம் செய்வது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2014 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. மக்களை பார்த்து 'செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?' என கேட்ட வார்த்தை மிகவும் பிரபலம். அதேபோல 2016 சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும் 'மக்களால் நான் மக்களுக்காக நான்'' என்ற வார்த்தையை உபயோகித்து அனைவரையும் கவர்ந்தார்.
அவர் மறைவுக்கு பின் எந்தவொரு கட்சி தலைவரும் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தியதே கிடையாது. ஆனால் மக்கள் நீதி மையம் தலைவர் கமல் பிரசாரத்தின் போது மறைமுகமாக ஜெ. பாணியை பின்பற்றுகிறார்.
சமீபத்தில் கோவை திருப்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் மக்களை பார்த்து 'நாளை நமதாகும்' எனக்கூறி முடித்தார். பின் மக்களைப் பார்த்து 'நாளை' என்று சொல்லி மைக்கை கூடியிருந்த மக்களை நோக்கி நீட்டவே 'நமதாகும்' என தெரிவித்தனர்.
இதுபோல மூன்று முறை அவர் கேட்டார். இந்த ஸ்டைல் ஜெ.வின் 'செய்வீர்களா...' என்ற வார்த்தையை மீண்டும் நினைவுபடுத்தியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE