சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி, கோவை, திருப்பூர், நீலகிரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ஈரோடு, கரூர், நாமக்கல், ஈரோடு, கடலூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாயப்பு உள்ளது.
தென் மாவட்டங்களில், 16 ம் தேதி, ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 17 ம் தேதி ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், 18 , 19ம் தேதிகளில் தமிழகம் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
அடுத்த 2 நாட்களுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும், வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியசும் பதிவாகும் இவ்வாறு அந்த அறிக்கையில் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE