புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டட பணிகள் இன்று துவங்கின. டில்லியில் தற்போது உள்ள பார்லிமென்ட் கட்டடம் 94 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ரூ.33 லட்சம் செலவில் கட்டப்பட்டது.
இந்த கட்டடத்தில் தற்போது இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்களை தீர்க்க ரூ. 971 கோடி செலவில் புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
![]()
|
கட்டுமான பணிகள் துவங்குவதற்கு புராதன கட்டடங்கள் கண்காணிப்பு குழுவின் ஒப்புதல் பெற உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதால் பணிகள் துவங்க தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் புராதன கட்டடங்கள் கண்காணி்ப்பு குழு சமீபத்தில் அனுமதியளித்தையடுத்து இன்று கட்டுமான பணிகள் துவங்கின. 2022-க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE