ஜன., 16, 1978
ஆந்திர மாநிலம், சித்துாரில், 1924 அக்., 15ம் தேதி, ராஜபுத்திர வம்சத்தில் பிறந்தவர், ஏ.பீம்சிங். சிறு வயதிலேயே, இவரது குடும்பம் சென்னையில் குடியேறியது. புரசைவாக்கம்எம்.சி.டி., முத்தையா பள்ளியில் கல்வி பயின்றார். இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். 'எடிட்டிங்' நுட்பத்தையும் கற்றுக் கொண்டார். 1954ல், அம்மையப்பன் என்ற படத்தை இயக்கினார்.தொடர்ந்து, பாவமன்னிப்பு, பாசமலர், பாகப் பிரிவினை, பார்த்தால் பசி தீரும் போன்ற, 'ப' வரிசையில் பற்பல வெற்றிப் படங்களைத் தந்தார். ஏராளமான தமிழ்ப் படங்கள் தவிர, ஹிந்தி - 18; தெலுங்கு - எட்டு; மலையாளம் - ஐந்து மற்றும் ஒரு
கன்னடப் படத்தையும், இவர் இயக்கியுள்ளார்.'புத்தா பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கி, பல படங்களையும் தயாரித்துள்ளார். 1978 ஜன., 16ம் தேதி, தன் 54வது வயதில், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.பழம்பெரும் இயக்குனர் ஏ.பீம்சிங் காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE