பெண்ணாடம் : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், பெலாந்துறை அணைக்கட்டில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக, பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதில், அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஆபத்தை உணராமல் குளிக்கின்றனர்.கடந்த 9ம் தேதி அணைக்கட்டில் குளித்த, துறையூர் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்ற இன்ஜியரிங் பட்டதாரி வாலிபர் சேற்றில் சிக்கி இறந்தார்.அதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில், கடந்த 10ம் தேதி அணைக்கட்டில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என செய்தி வெளியானது.அதைத்தொடர்ந்து, பொதுப்பணித்துறை சார்பில் உதவி பொறியாளர் பாஸ்கர் தலைமையில் ஊழியர்கள் நேற்று அணைக்கட்டு பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE