ஜெய்பூர்: அடுத்த ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (ஜன.16) காலை துவங்கியது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முதல்வர் அசோக் கெலாட் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்த நாளுக்காக தான் அனைவரும் காத்திருந்தோம். இறுதியாக கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ராஜஸ்தானில் 167 மையங்களில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு நபருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அடுத்த ஆறு மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அதுவரை அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE