புதுடில்லி: அரசு பிரதிநிதிகள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன் என காங்., எம்.பி., மணீஷ் திவாரி கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசர கால ஒப்புதலை அளித்தது. மேலும், கொரோனா தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது, தங்களுக்கான வாய்ப்பு வரும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதற்கு காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்பி உள்ளன. மற்ற நாடுகளை போல, முதல் தடுப்பூசியை நாட்டு தலைவர்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என காங்., கூறியிருந்தது.

இந்நிலையில், இன்று (ஜன.,16) முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். முதல்கட்டமாக டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இது குறித்து காங்., எம்.பி., மணீஷ் திவாரி கூறியதாவது: அரசு பிரதிநிதிகள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன்?. பிற நாடுகளில் அரசின் சார்பில் பிரதமர்களும், சுகாதார அமைச்சர்களும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளும்போது இந்தியாவில் மட்டும் அரசுப் பிரதிநிதிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தவிர்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE