திருச்சி: தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
நாடு முழுவதும் நேற்று (ஜன.,16) முதல் கொரோன தடுப்பூசி போடும் திட்டம் துவங்கியது. தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் இத்திட்டத்தை துவக்கி வைத்தனர். முதல்நாளான நேற்று மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி 2,783 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. முதல்நாள் தடுப்பூசி போடும் திட்டத்தில் மதுரையில் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பு மருந்தும் பாதுகாப்பானது தான். தடுப்பூசி போடும் திட்டம், இலக்கு நோக்கிய திட்டம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE