புதுடில்லி: வேளாண் சட்டத்திற்கு பெரும்பாலான விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: வேளாண் சட்டத்திற்கு, பெரும்பாலான விவசாயிகளும், நிபுணர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தயாராக உள்ளோம். உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக, சட்டத்தை தற்போது அமல்படுத்த முடியாது. எனவே, வரும் 19ம் தேதி நடக்கும் ஆலோசனையின் போது, சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனக்கூறாமல், சட்டத்தை ஒவ்வொரு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி விட்டு கூறட்டும். அது குறித்து விரிவாக ஆலோசனை நடத்த தயாராக உள்ளோம்.

பயிர்கழிவுகளை எரிப்பது மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறோம். ஆனால், சட்டத்தை நீக்க வேண்டும் என்று மட்டும் தான் விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தோமர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE