திருப்பதி:ஆந்திராவில் ஹிந்து கோவில்களில் சிலை உடைப்பை தொடர்ந்து, தர்காவிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
![]()
|
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹிந்து கோவில்களில் உள்ள சிலைகள், அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு வந்தன.
கோவில்கள் மீதும் தாக்குதல் நடந்து வந்தது. இதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் சிலரை கைது செய்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, சித்துார் மாவட்டம் பலமநேருவில் உள்ள ஒரு தர்காவிலும், மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி, அங்குள்ள துணிகள் மற்றும் பொருட்களை தீயிட்டு எரித்தனர்.
![]()
|
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். ஹிந்து கோவில்களை தொடர்ந்து, இஸ்லாமிய தர்காக்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கோவில்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியது போல், தர்காக்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, இஸ்லாமிய சமூகத்தினர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE