பொங்கலன்று தமிழகத்திற்கு வந்த ராகுல், மதுரை நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின், ஜல்லிக்கட்டையும் பார்த்து ரசித்தார். இந்த விவகாரம் டில்லியில் பெரும் பிரச்னையை ஏற்படுத்திஉள்ளது.
இத்தாலி சென்றிருந்த ராகுல், ஜன., 10ம் தேதி இந்தியாவிற்கு திரும்பினார். 'இப்படி வெளிநாட்டிலிருந்து வருபவர்கள், ஐந்து நாட்களாவது தனிமையில் இருக்க வேண்டும்' என்பது, கொரோனா பாதுகாப்பு நடைமுறை. பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக, இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
ஆனால், ராகுல், 14ம் தேதி தமிழக நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிகளில் எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை.கொரோனாவைக் கட்டுப்படுத்த, அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் நிலையில், ராகுலின் இந்த பயணம், பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE