சென்னை: தமிழகத்தில் எந்தெந்த ஊர்களில், பிரதமர் தேர்தல் பிரசாரம் செய்யப் போகிறார் என்பதை, பா.ஜ., தலைமையும், பிரதமரின் பாதுகாப்பு குழுவும் முடிவு செய்ய உள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலில், மோடி எங்கு பிரசாரம் செய்தாரோ, அங்கு இந்த முறை போக மாட்டார் என்கின்றனர். தமிழகத்தில், மதுரை, திருநெல்வேலி, கோவை உட்பட ஐந்து இடங்களில், மோடி பிரசாரம் செய்ய உள்ளாராம்.
சென்னையில், பிப்., இறுதியில் ஒரு மெகா பேரணி நடத்த, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. கூட்டணி கட்சிகள், இந்த பேரணியில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE