புதுடில்லி: இந்த முறை பார்லிமென்டில் காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறையால், அரசுக்கு, 140 கோடி ரூபாய் மிச்சம் என சொல்லப்படுகிறது.
ஆனால், உண்மையான காரணம் வேறொன்று என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.வழக்கமாக பட்ஜெட் அறிக்கைகள் அச்சடிக்கப்படும்போது, ரகசியம் காக்கப்படும். இங்கு பணியாற்றும் ஊழியர்கள், பணி முடியும் வரை, இங்கேயே தங்கியிருக்க வேண்டியது ஏற்படும்.
இவ்வளவு பாதுகாப்புகள் இருந்தும், பட்ஜெட் பற்றிய சில விபரங்கள், தொழிலதிபர்களுக்கு, முன் கூட்டியே கசிந்து விடுகின்றன. இதை, அந்த தொழில் அதிபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். இதை தடுக்கவே, காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE