கடந்த 2020 உலகத்தை கலக்கிவிட்டுச் சென்றது. அதே ஆண்டில், இன்னொரு பூமிக் கலக்கலும் நடந்தேறியுள்ளது. அதாவது, பூமி தன்னைத் தானே சுற்றும் வேகம் சற்றே அதிகரித்துள்ளது.
அதிகமில்லை, பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்திருப்பது, ஒரே ஒரு நொடி கூடுதல்தான். எனவே, உலக நேரத்தை கணக்கிடும் அணுக் கடிகாரத்தில், ஒரு நொடியை கழித்து ஒடவைக்கவேண்டும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
கடல் அலைகள், காற்று வீசும் வேகம், பூமியின் மையத்தில் அலைபாயும் எரிமலைக் குழம்பு என்று பல காரணிகளால் பூமியின் சுழற்சி வேகம் சற்றே மாறுபடுவதுண்டு. வழக்கமாக, இந்த இயற்கைக் காரணிகளால் வேகம் குறையும். ஆனால், 2020ல் வேகம் சற்றே கூடியுள்ளது என்பதுதான் விந்தை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE