திருவனந்தபுரம் : கேரள அரசின் அனைத்து துறை விண்ணப்பங்களிலும் திருநங்கையரை ஒரு பாலினமாக சேர்க்க நேற்று உத்தர விடப்பட்டு உள்ளது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில அரசு துறைகளுக்கான அனைத்து படிவங்களிலும் பாலினம் என்ற இடத்தில் ஆண் பெண் ஆகியவற்றுக்கு அடுத்ததாக திருநங்கையர் பிரிவினை சேர்க்க வேண்டும் என நேற்று உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2014ல் திருநங்கையருக்கு அரசு தரப்பில் சம உரிமை மற்றும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து அந்த வழிமுறைகளை நடைமுறைப்படுத்திய முதல் மாநிலம் என்ற பெயரை கேரளா பெற்றுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE