சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் உடல்நிலை திடீரென மோசம் அடைந்துள்ளது. அவருக்கு, உயிர் காக்கும் கருவி வாயிலாக, 'எக்மோதெரபி' சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ், 60. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், இம்மாதம், 6ம் தேதி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையை தொடர்ந்து, உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன்பின், பொங்கலுக்கு முன்னதாக, மருத்துவமனையில் இருந்து, வீடு திரும்பினார்.
![]()
|
மேலும், ஆக்சிஜன் அளவு, 91 ஆக உயர்ந்தது. இதற்கிடையே, நுரையீரல் செயல்பாட்டுக்காக, உயிர் காக்கும் கருவியான, 'எக்மோதெரபி' சிகிச்சை தேவை என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அச்சிகிச்சை வசதி, அரசு மருத்துவமனைகளில் இல்லாத நிலையில், சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில், அமைச்சர் காமராஜ், இன்று (ஜன.19) இரவு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, உயிர் காக்கும் எக்மோதெரபி சிகிச்சையுடன், தொடர் கண்காணிப்பில், டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். நலம் விசாரிப்பு
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று இரவு எம்.ஜி.எம்.மருத்துவனை சென்று காமராஜ் உடல்நலம் குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் விசாரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE