புதுடில்லி:பறவை காய்ச்சல் எதிரொலியாக, டில்லி செங்கோட்டையில், பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
டில்லி, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களிலும், பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை, அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். டில்லியில் கோழி இறைச்சி விற்பனை தற்காலிகமாக தடை செய்யப்பட்டு உள்ளது.இந்நிலையில், டில்லி செங்கோட்டையில் சமீபத்தில், 15க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தன.
அச்சமடைந்த அதிகாரிகள், அவற்றை ஆய்வுக்கு அனுப்பினர்.பறவை காய்ச்சலால் அவை இறந்தது உறுதியானது. இதையடுத்து, செங்கோட்டையை பொதுமக்கள் பார்வையிட, வரும், 26ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது என, அதிகாரிகள் நேற்று கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE