புதுடில்லி : டில்லியில், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்துவதில், விவசாய சங்கத்தினர் உறுதியாக உள்ளதால், எல்லை பகுதியில் பதற்றம் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, குடியரசு தினத்தன்று, டில்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதற்கு, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், 'தேபா கிசான் கமிட்டி' என்ற வேளாண் சங்கத்தின் தலைவர் அமர்ஜீத் சிங், நேற்று கூறியதாவது:இது, எங்கள் நாடு. எங்கள் தேவைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் குரல் கொடுப்பது, எங்கள் உரிமை. குடியரசு தினத்தன்று, நாங்கள் நடத்த இருக்கும் டிராக்டர் பேரணிக்கு, மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். அமைதியான முறையில், பேரணி நடத்துவோம். எந்த வன்முறையிலும் ஈடுபடமாட்டோம்.தேசிய கொடி மற்றும் விவசாய சங்கங்களின் கொடிகளுடன், அந்த பேரணியில் பங்கேற்போம். எங்களை தடுத்து நிறுத்தக் கூடாது. எங்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தக் கூடாது. டிராக்டர் பேரணியை கைவிடும் பேச்சுக்கே இடம் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
டிராக்டர் பேரணியை நடத்த, விவசாயிகள் உறுதியாக இருப்பதால், டில்லி எல்லை பகுதியில், பதற்றம் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE