கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி 'ரெய்டு'

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (227) | |
Advertisement
சென்னை: கிறிஸ்துவ மதபோதகரான பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில் கிறிஸ்துவ மத பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். கிறிஸ்துவ மதபோதகரான இவர் கோவையில் காருண்யா பல்கலை.,யும் நடத்தி வருகிறார். இயேசு அழைக்கிறார் குழுமத்துக்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என பால்
IncomeTax, Raid, பால்_தினகரன், இயேசு_அழைக்கிறார், வருமான வரித்துறை, சோதனை

சென்னை: கிறிஸ்துவ மதபோதகரான பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.



'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில் கிறிஸ்துவ மத பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். கிறிஸ்துவ மதபோதகரான இவர் கோவையில் காருண்யா பல்கலை.,யும் நடத்தி வருகிறார். இயேசு அழைக்கிறார் குழுமத்துக்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என பால் தினகரன் மீது புகார் எழுந்தது.


latest tamil news


கிறிஸ்தவ மத போதகர் டிஜிஎஸ் தினகரன் 'இயேசு அழைக்கிறார்' என்ற அமைப்பை 1960களில் தொடங்கி, மத பிரசாரக் கூட்டங்களை நடத்தி வந்தார். தினகரன் மறைவுக்குப் பின் அவர் மகன் பால் தினகரன் பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். கோவையில் காருண்யா பல்கலைக்கழகத்தையும் நடத்தி வருகிறார். இயேசு அழைக்கிறார் குழுமத்துக்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை; வரி ஏய்ப்பு நடக்கிறது என தொடர்ந்து பால் தினகரன் மீது புகார்கள் வந்தன. இதனையடுத்து, பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சென்னையில் பாரிமுனை, அடையாறு ஆகிய இடங்களில் உள்ள இயேசு அழைக்கிறார் வளாகங்கள், கோவை காருண்யா பல்கலைக்கழகம் என தமிழகம் முழுவதும் 28 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

இதனையடுத்து, தமிழகம் முழுவதும் சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்ளிட்ட 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.


latest tamil news

Advertisement




வாசகர் கருத்து (227)

மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
22-ஜன-202119:55:12 IST Report Abuse
மதுரை விருமாண்டி போன தேர்தலின் போது "கல்கி சாமியார்" ன்னு ஒரு டுபாக்கூர் கிட்டேருந்து பொண்டாட்டி சகிதமா 5,000 கோடி அள்ளியிருக்கோமுன்னு கலர் கலரா செய்தி வந்தது.. அது என்னாச்சுன்னு யாருக்காவது தெரியுமா? கமிஷன் எவ்வளவு அடிச்சாங்கன்னு சொல்லுவாங்களா, மத்த சாமியாருங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.. மெஜாரிட்டி மதமும் வளரனும் இல்லியா..
Rate this:
avvaiyar - Singapore,சிங்கப்பூர்
25-ஜன-202112:35:29 IST Report Abuse
avvaiyar. ஏசு பெயர் வைத்து லாபம் கண்டவர்களுக்கு இப்போ நல்ல ஆப்பு தல புராணம் பாவம் தனியா புலம்புது.....
Rate this:
Cancel
S.Kannan - Thiruchy,இந்தியா
22-ஜன-202112:41:09 IST Report Abuse
S.Kannan காருண்யா யூனிவர்சிட்டில வேலை செய்யற ஸ்டாப்புங்களுக்கு அதிஷ்டம் அழைக்குது...அள்ளுங்க அள்ளுங்க பணத்தை அள்ளுங்க
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
22-ஜன-202110:18:53 IST Report Abuse
மதுரை விருமாண்டி வரி ஏய்ப்பு செஞ்சவன் எல்லாம் தேசத்துரோகிங்கன்னா மொத்த குஜராத்தையும் நாடு கடத்தோணும்..
Rate this:
avvaiyar - Singapore,சிங்கப்பூர்
25-ஜன-202112:34:58 IST Report Abuse
avvaiyarதல புராணம் பாவம் தனியா புலம்புறார்... ஏசு பெயர் வைத்து லாபம் கண்டவர்களுக்கு இப்போ நல்ல ஆப்பு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X