கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கம் மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரியில் நேற்று (ஜன.,19) இரவு பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

பிரதமர் நிவாரணம்
இந்த விபத்து தொடர்பாக பிரதமர் அலுவலகம் சார்பில் பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி: ஜல்பைகுரியில் நடந்த விபத்து மிகவும் வேதனையளிக்கிறது. துக்கமான இந்த நேரத்தில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE