வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக டிரம்ப் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் இன்று (ஜன.,20) இந்திய நேரப்படி இரவு 9:30 மணிக்கு பதவியேற்க உள்ளார். அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட், அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்டுள்ள கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கிறார். பதவி ஏற்பு விழாவில் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து கலவரம் செய்யக்கூடும் என்பதால், வாஷிங்டன் நகர் முழுவதும் 22 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் டிரம்ப் பேசியதாவது: புதிதாக அமையவுள்ள அரசுக்கு வாழ்த்துகள். அமெரிக்காவை வளமான பாதுகாப்பான நாடாக்க புதிய நிர்வாகம் எடுக்கும் முயற்சிகள் வெற்றிப்பெற பிரார்த்திப்போம். பார்லி.,யில் நடைபெற்ற வன்முறை அதிர்ச்சியடைய செய்தது. இதை சகித்துக்கொள்ள முடியாது. கொரோனா வைரசால் உலகமே பாதிக்கப்பட்டபோது அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE