பீஜிங்: கிட்டத்தட்ட 3 மாதங்கள் எங்கிருந்தார் எனத் தெரியாமல் தலைமறைவாக இருந்த அலிபாபா நிறுவனர் ஜாக் மா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஆசிரியர்களுடனான ஆன்லைன் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.
சீன கோடீஸ்வரரும், சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா நிறுவனருமான ஜாக் மா, அரசு வங்கி மற்றும் நிதித் துறை கட்டுப்பாட்டு அமைப்புகளின் பிற்போக்கான செயல்பாடுகள் குறித்து விமர்சித்ததால், சீன அரசின் கோபத்திற்கு ஆளானார். இதையடுத்து, சீன அரசு, ஜாக் மாவின், 'ஆன்ட்' நிறுவன பங்கு வெளியீட்டை நிறுத்தியது. ஜாக் மாவின் அலிபாபா குழும நிறுவனங்களில் சட்டமீறல் நடந்ததாக கூறி, அபராதம் விதித்து, அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு, ஜாக் மா, எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

இதற்கு சீன அரசு கொடுத்த நெருக்கடி தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் ஊரக பகுதியை சேர்ந்த ஆசிரியர்களுடன் ஆன்லைன் கலந்துரையாடலில் ஜாக் மா கலந்து கொண்டு பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சீன ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இதனை சீன பத்திரிகையாளர் ஒருவர், 'அவர் ஓடி ஒளியும் ஆளில்லை' என குறிப்பிட்டு அவரது 36 நொடிகள் கொண்ட வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 3 மாத இடைவெளிக்கு பிறகு பொதுவெளியில் தோன்றியதால், ஜாக் மா ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Ma, who used to be an English teacher and founder of #Alibaba, also gives wishes to village teachers via a video on Wednesday, saying usually the activity is held in Sanya in southern Hainan but this year, due to #Covid19 it has to be done via video conference. pic.twitter.com/yfi7oPB5Sb
— Qingqing_Chen (@qingqingparis) January 20, 2021
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE