கவுகாத்தி : ''அசாம் சட்டசபை தேர்தலில், 33 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு நடக்கும்,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்தார்.

அசாமில், முதல்வர் சர்பானந்த சோனேவால் தலைமையிலான, பா.ஜ., அரசு நடக்கிறது. மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, சட்டசபை தேர்தலுக்கான பணிகளை ஆய்வு செய்ய, அசாமுக்கு நேற்று சென்றார். கவுகாத்தியில் அவர் கூறியதாவது: அசாமில் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கொரோனா பரவல் உள்ளதால், 1,500 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி என்பது, 1,000 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி என, மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

அதனால், அசாமில், 33 ஆயிரத்துத்துக்கும் அதிகமான ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு,ஓட்டுப்பதிவு நடக்கும். அசாம் மட்டுமின்றி, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE