சென்னை: பிப்.,2-ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:ஆண்டில் முதல் சட்டசபை கூட்டத்தொடர் பிப்., 2-ம் தேதி கவர்னர் உரையுடன் கூடுகிறது. அப்போது கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது. இவ்வாறு சட்டசபை செயலாளர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE