பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை காலம் முடிவடைந்து வரும் 27ல் அவர் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறை நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது.இந்நிலையில் நேற்று முன் தினம் சிறையில் சசிகலாவுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
பவுரிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காய்ச்சல் இருந்ததால் கொரோனா வைரசுக்கான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன. கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் 'சி.டி. ஸ்கேன்' எடுப்பதற்காக விக்டோரியா மருத்துவமனைக்கு சசிகலா நேற்று மாற்றப்பட்டார்.
அவருக்கு நுரையீரல் தொற்று உள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் 'சசிகலாவுக்குமேற்கொள்ளப்பட்டஆர்.டி. - பி.சி.ஆர். பரிசோதனையில்அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அரசியல் விமர்சகரும் டாக்டருமான சுமந்த் சி ராமன்சமூக வலைதளமான டுவிட்டரில் 'சி.டி. ஸ்கேனின் அறிக்கை சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான வாய்ப்புள்ளதை தெரிவிக்கிறது' என தெரிவித்திருந்தார். தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE