சென்னை : தமிழகத்தில், நாளை முதல் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் எம்.பி., ராகுல், தொழில் துறையினர், விவசாயிகளை சந்தித்து பேசுகிறார்.
தி.மு.க., கூட்டணியில், தமிழக காங்கிரசுக்கு குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்டும் வகையில், பொங்கலன்று, ராகுலின் முதல் கட்ட சுற்றுப்பயணம் துவங்கியது.
'ராகுலின் தமிழ் வணக்கம்' என்ற பெயரில், மதுரை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிட்டு, கிராம மக்களிடம் சரிசமமாக அமர்ந்து உணவு அருந்தினார். இரண்டாம் கட்ட சுற்றுப்பயணமாக, நாளை காலை, 11:00 மணிக்கு, கோவை வருகிறார், ராகுல். விமான நிலையத்தில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
![]()
|
தொடர்ந்து கோவை பகுதிகள்; 24ல் ஈரோடு; 25ல் கரூர் பகுதிகளிலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுகிறார். சாலை மார்க்கமாகவும் பயணிக்கிறார்.
கரூர் மாரிக்கவுண்டன் பாளையத்தில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டிலும் பங்கேற்கிறார். மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து, 25ம் தேதி மாலை, மதுரையில் இருந்து விமானத்தில் டில்லி செல்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE