புதுடில்லி: வாரணாசியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திய மருத்துவ பணியாளர்களுடன், பிரதமர் மோடி இன்று (ஜன.,22) வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடுகிறார்.
கடந்த 16ம் தேதி, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். முதற்கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போடும் நடவடிக்கையின்போது, பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு தடுப்பூசி போட, அரசு தரப்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. டாக்டர், நர்ஸ், சுகாதார பணியாளர்கள், போலீஸ் என, முன்கள பணியாளர்களுக்கு, முதல் கட்டத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை (இன்று) மதியம் 1.15 மணிக்கு, வாரணாசியில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயனாளிகள் மற்றும் தடுப்பூசி போட்டவர்களுடன் வீடியோ கான்பரன்சிங்கில் கலந்துரையாட உள்ளேன்.
தடுப்பூசி திட்டத்தால் பயனடைந்தவர்களின் அனுபவத்தை நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ள போகிறேன். இந்நிகழ்வை மக்கள் அனைவரும் காண வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE