சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டார்.
கொரோனா வைரசுக்கு எதிராக, இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளன. கடந்த, 16ம் தேதி, இந்த தடுப்பூசிகள் போடும் முதல்கட்ட நடவடிக்கை துவங்கியது.'டாக்டர், நர்ஸ், சுகாதார பணியாளர்கள், போலீஸ் என, முன்கள பணியாளர்களுக்கு, முதல் கட்டத்தில் தடுப்பூசி போடப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் நேற்று வரை 42,947 பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டார். முன்னதாக, அவருக்கு ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், 908வது நபராக கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டேன். தமிழகத்தில் 42 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறைவாகவே கோவாக்சின் போடப்படுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தவே அதனை போட்டு கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE