ஓசூர்: ஓசூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் இன்று (ஜன.,22) காலையில் துப்பாக்கி முனையில் ரூ.7.41 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
ஓசூர் அருகே பாகலூர் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தை மேலாளர் இன்று காலை திறந்துள்ளார். சிறிது நேரத்தில் வாடிக்கையாளர் போல 5 நபர்கள் வந்துள்ளனர். அப்போது திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி அங்கிருந்த மேலாளர் மற்றும் 4 பணியாளர்களை மிரட்டி, அவர்களது கைகளை கட்டிப்போட்டு, வாயில் டேப் ஒட்டியுள்ளனர். பின்னர், தங்க நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடினர்.
திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.7.41 கோடி என்றும், பணம் ரூ.90 ஆயிரத்துக்கும் மேல் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரும் பெங்களூருவை சேர்ந்தவர்களாக இருக்க கூடும் எனவும் முதல்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகின்றனர். மேலும், நிறுவனம் மற்றும் அருகில் உள்ள கடைகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE