புதுடில்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் தற்போதைய ராஜ்யசபா எம்.பி.,யுமான ரஞ்சன் கோகாய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
![]() ரஞ்சன்
கோகாய்க்கு
இசட் பிளஸ்
பாதுகாப்பு
புல்லட் நுழைய முடியாத வாகனத்தில் பயணிப்பார்
|
இது குறித்து கூறப்படுவதாவது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான ரஞ்சன் கோகாய் கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து அவர் பா.ஜ.,சார்பில் ராஜ்யசபாவுக்கு எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே விஐபிக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பு தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 66 வயதான ரஞ்சன் கோகாய்க்கு மத்திய ரிசர்வ் போலீஸ்படை ( சி.ஆர்.பி.எப்) யின் ஆயுதம் ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்படும்.
![]()
|
இவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த போது ராமர் கோவில் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குளில் முக்கிய தீர்ப்புகள் வழங்கி உள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement