கோவை: தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி இன்று(ஜன.,23) கோவை கோனியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.

தொடர்ந்து அவர் கோவை ராஜவீதியில் பிரசாரத்தில் பேசுகையில்:

திமுக குடும்பத்திற்காக வாழும் தலைவரை பெற்றது. குடும்ப நலனே அவர்களுக்கு பெரிது. ஆனால் அதிமுகவில் மக்களுக்காக தொண்டு ஆற்றும் தலைவர்கள் உள்ளனர்.இது தான் நமக்கு பெருமை. இந்த தலைவர்களின் வழியில் நடக்கிறோம். கட்சியை , ஆட்சியை கலைக்க முற்பட்டார் ஸ்டாலின். ஆனால் நாங்கள் அதனை முறியடித்தோம்.
கட்டப்பஞ்சாயத்து நடக்கும்
திமுக ஆட்சிக்கு வந்தால் வசூல் வேட்டை, கட்டப்பஞ்சாயத்து செய்வர். கொலை, கொள்ளை உருவாகும். யாரும் சுதந்திரமாக நடமாட முடியாது. அத்தகைய ஆட்சி தேவையா , ஊழலுக்கு கலைக்கப்பட்ட கட்சி திமுக. எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முடியாது. அராஜக ஆட்சி செய்யும் திமுகவை வர விடாமல் பார்த்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கோவையில் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரை சந்தித்து முதல்வர் பழனிசாமிஆசி பெற்றார் . அப்போது, திருநீறு பூசி ஆசிர்வாதம் செய்தார்.

கோவை, ஆத்துப்பாலம் அருகே போத்தனூர் பிரிவில் உள்ள திருமண மண்டபத்தில், அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளுடன், முதல்வர் பழனிசாமி உரையாடினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE