கோல்கட்டா: சுழற்சி அடிப்படையில், இந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் இருக்க வேண்டும் என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நேதாஜியின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பேரணியில் கலந்து கொண்ட மம்தா பேசியதாவது: நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்காத மத்திய அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன். புதிய பார்லிமென்ட் கட்டுகிறீர்கள். புதிய விமானம் வாங்குகிறீர்கள். ஆனால், நேதாஜிக்கு நினைவிடம் கட்டாதது ஏன்? துறைமுகத்திற்கு ஷியாமா பிரசாத் முகர்ஜி பெயர் சூட்டுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், எங்களுக்கு கோல்கத்தா துறைமுகத்திற்கு நேதாஜி பெயரை சூட்ட ராஜிவ் கிடைத்தார்.
இந்தியாவிற்கு சுழற்சி அடிப்படையில் நான்கு தலைநகரங்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்தியாவை, ஆங்கிலேயர்கள் கோல்கட்டாவில் இருந்து ஆட்சி செய்தனர். நாட்டிற்கு ஒரே தலைநகரம் மட்டும் ஏன் இருக்க வேண்டும்? இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE