புதுடெல்லி: பார்லிமென்டில் ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யவதற்கு முன் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது ஊழியர்கள் மற்றும் அதிகரிகளுக்கு அல்வா வழங்கும் நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் அல்வா கிண்டி வழங்குவது வழக்கம். மத்திய பட்ஜெட் வரும் பிப்.1 ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், 2021-22 -ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் காகிதமில்லா டிஜிட்டல் மூலம் தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தா்ர. இருப்பினும் வழக்கமான முறைப்படி அல்வா கிண்டி பட்ஜெட் தயாரிப்பு நடைமுறைகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
![]()
|
இதையடுத்து இன்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அல்வா கிண்டி 2021-22 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE