வாஷிங்டன் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீட்கும் வகையில், நாட்டு மக்கள் அனைவருக்கும், நிவாரண தொகையை, மூன்று மடங்கு உயர்த்தி, அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், தொடர்ந்து பல உத்தரவுகளில் கை யெழுத்திட்டு வருகிறார். அதில் முக்கியமாக, கொரோனா நிவாரண உதவித் தொகையை மூன்று மடங்காக உயர்த்தும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
![]()
|
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவலால், நாட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அவர்களுடைய தவறு அல்ல. வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்டு வருவதற்காக பல திட்டங்களை அறிவித்துள்ளோம்.நாட்டு மக்கள் அனைவருக்கும், தலா, 21,900 ரூபாய் வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அது போதாது. மக்கள், கவுரமாக வாழ உதவிட வேண்டியது அரசின் கடமை. அதனால், இந்த உதவித்தொகையை, 1.46 லட்சம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளேன்.
வைரஸ் பாதிப்பால், 1.8 கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். மக்கள் பசியுடன் இருக்க அனுமதிக்க மாட்டோம்; வீட்டு வாடகைகூட தர முடியாமல் உள்ளனர். பலர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். அது தடுக்கவே, இந்த நிவாரண உதவித்தொகை திட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE