சென்னை:'பேரறிவாளன் உட்பட, ஏழு பேர் விடுதலை தொடர்பாக, விரைவில் நல்ல தீர்வு வரும்' என, துணை முதல்வர்பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவர், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும், சிறையிலிருந்து விடுவிக்க, சட்டசபையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு பரிந்துரைத்ததும், ஜெயலலிதா அரசு தான்.ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே, ஜெ., அரசின் உறுதியான நிலைப்பாடு. விரைவில், நல்ல தீர்ப்பு வரும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE