புதுடில்லி:லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பது குறித்து, இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் இடையே, இன்று பேச்சு நடக்கவுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில், சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க, இந்திய ராணுவம் குவிக்கப்பட்டதை தொடர்ந்து, எட்டு மாதங்களாக அங்கு பதற்றம் நீடிக்கிறது. பதற்றத்தை தணிப்பதற்கான முயற்சியில், இரு நாடுகளும் ஈடுபட்டு உள்ளன.இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே, எட்டு முறை பேச்சு நடந்தது.

கடைசி முறை பேச்சு நடந்தபோது, சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இரு தரப்பும், ராணுவத்தை விலக்கிக் கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் இடையே, ஒன்பதாவது சுற்று பேச்சு இன்று நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE