சென்னை:இந்தியாவில், 'கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகளை, அவசரகால பயன்பாட்டுக்கு, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, 16ம் தேதி முதல், நாடு முழுதும், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழகத்தில், 4.5 லட்சம் பணியாளர்கள், தடுப்பூசி போட, கோ-வின்' என்ற செயலியில் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால், 60 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.சுகாதார பணியாளர்களிடம் தயக்கம் தொடர்கிறது. மற்றவர்களுக்கு தடுப்பூசி போட்டு, அவர்களின் நிலையை பார்த்த பின், போட்டுக் கொள்ளலாம் என்ற, மன நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வராத சுகாதார பணியாளர்களுக்கு, பின், தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படாது என, சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE