சென்னை:தமிழகத்தில், கொரோனா தொற்றால் நேற்று, இரண்டு பேர் மட்டுமே இறந்துள்ளனர். பல மாதங்களுக்கு பின், உயிரிழப்பு குறைவாக பதிவாகி உள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 253 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 63 ஆயிரத்து, 73 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, 586 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, சென்னையில், 153 பேர்; செங்கல்பட்டில், 51 பேர்; கோவையில், 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை, 1.55 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 8 லட்சத்து, 34 ஆயிரத்து, 171 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்றவர்களில், 673 பேர் வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து, 8 லட்சத்து, 16 ஆயிரத்து, 878 பேர், கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
தற்போது, சென்னையில், 1,749 பேர்; கோவையில், 498 பேர் என, 4,984 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மாநிலத்தில், நேற்று இருவர் மட்டுமே இறந்துள்ளனர். இதனால், பல மாதங்களுக்கு பின், கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை, மிகவும் குறைந்துள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை, 12 ஆயிரத்து, 309 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE