சென்னை:தமிழகம் முழுவதும், வருவாய் துறையில் பணியாற்றும் தாசில்தார்களுக்கு, பணி நியமனம் அடிப்படையில், துணை கலெக்டர் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
அதன்படி, 107 தாசில்தார்களுக்கு, சமீபத்தில் துணை கலெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில், சென்னை மாவட்டத்தில், 15 பேர் இடம் பெற்றிருந்தனர். அந்த வரிசையில், மீதமுள்ள, 31 பேர், எப்போது பதவி உயர்வு வழங்கப்படும் என, எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மாவட்ட உயரதிகாரிகள் கூறுகையில், 'சென்னையில், இரண்டு பேர் உட்பட, 31 தாசில்தார்களுக்கு, பிப்ரவரி முதல் வாரத்தில், பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE