பெங்களூரு: பெங்களூரு நகரின் பேகூரில், சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால், சுற்றுப்புற மக்கள் பீதியடைந்துள்ளனர். வெளியே வரவும் தயங்குகின்றனர்.பெங்களூரு, பேகூரில், அபார்ட்மென்ட் அருகில், இரண்டு நாட்களுக்கு முன் இரவு, சிறுத்தையொன்று சாலையை கடந்து சென்றது. இக்காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில், வைரலாக பரவியுள்ளது.சிறுத்தை நடமாடிய வீடியோவை பார்த்து, அபார்ட்மென்ட் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள், போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். சிறுத்தை நடமாடியதற்கான அடையாளம் கண்டுப்பிடிக்கப்பட்டது.'சாலையில் சிறுத்தை நடமாடியது உண்மைதான். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க, அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE