கே.ஆர்.புரம்: ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த, 50 கோடி ரூபாய் மதிப்பிலான, 21 சென்ட் அரசு நிலம் மீட்கப்பட்டது.பெங்களூரு, கே.ஆர்.புரம் பென்னிகானஹள்ளி கிராமத்தில், சர்வே எண், 82ல், 21 சென்ட், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.இதை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கையகப்படுத்தும்படி, மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள், நேற்று காலை ஆக்கிரமிப்பை அகற்றி, நிலத்தை கையகப்படுத்தினர். இதன் மதிப்பு, 50 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.கே.ஆர்.புரம் மேம்பாலம் அருகில், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், கையகப்படுத்தப்பட்ட இந்த நிலத்தில், புதிய பஸ் நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE