ஹாவேரி: தன்னுடன் வாழாமல் பிரிந்து சென்ற மனைவியை, அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சித்து, கணவர், தற்கொலை செய்ய முயற்சித்தார்.ஹாவேரி மாவட்டம், ராணி பென்னுார் தாலுகாவின், கேரிமல்லாபுரா கிராமத்தில் வசிப்பவர், மைலப்பா தம்பூரி, 35. இவரது மனைவி, மகாதேவக்கா, 30. இவர்களுக்கு, 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. குடும்ப பிரச்னையால் ஓராண்டுக்கு முன் பிரிந்தனர்.தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை கொலை செய்ய, மைலப்பா தம்பூரி திட்டமிட்டார். நேற்று காலையில், ராணி பென்னுார் அருகே சாலையில் நடந்த சென்ற மனைவியை வழிமறித்து, அரிவாளால் தாக்கினார். தானும் கழுத்தை அறுத்து, தற்கொலை செய்ய முயற்சித்தார்.ரத்த வெள்ளத்தில் கிடந்த தம்பதியை, அப்பகுதியினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.சஹரா காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE