குடகு; குடகு மாவட்ட புதிய கலெக்டராக, சாருலதா சோமல், நேற்று பொறுப்பேற்றார்.குடகு மாவட்ட கலெக்டராக இருந்த அனிஷ் கண்மணி ஜாய்ஸ், இரண்டு ஆண்டு விடுமுறையில், கடந்த மாதம், அமெரிக்கா சென்றார்.காலியாக இருந்த அப்பதவிக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாருலதா சோமல் நியமிக்கப்பட்டார். இவர், நேற்று பொறுப்பேற்றார்.பொறுப்பு கலெக்டர் பன்வர் சிங் மீனா, முறைப்படி அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.சாருலதா சோமல், ஏற்கனவே குடகு மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE