புதுடில்லி : அனைத்து விதமான பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும், 5 சதவீத ஜி.எஸ்.டி., மட்டுமே விதிக்க வேண்டும் என, 'இந்திய வர்த்தகர்கள் மேம்பாட்டு கவுன்சில்' அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: இத்துறை சார்ந்த உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு வரிச் சலுகைகள் வழங்க வேண்டும். டிஜிட்டல் உள்கட்டமைப்புகளுக்கும் சேர்த்து இந்த சலுகை வழங்கப்பட வேண்டும்.
மேலும், மூலப் பொருட்களுக்கான இறக்குமதியிலும், ஐந்து ஆண்டுகளுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

வெள்ளை சாக்லேட்டுகள், கோகோ பவுடர், கோகோ சாக்லேட்டுகள், காபி எசன்ஸ் உள்ளிட்டவற்றுக்கு, 28 சதவீத ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுகிறது. இதேபோல் மால்ட், சுத்திகரிக்கப்பட்ட
சர்க்கரை, சுண்டிய பால் உள்ளிட்டவற்றுக்கு, 18 சதவீத வரி விதிப்படுகிறது. இதை விடுத்து, அனைத்து விதமான பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கு, ஒரே விதமாக, 5 சதவீத வரி விதித்தால், அனைத்து விதமான வர்த்தக போட்டிகளையும் இத்துறையால் சமாளிக்க முடியும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE